தமிழ்நாடு

tamil nadu

"நான் மிரட்டினேன் அவர் கொளுத்திட்டார்" பெண்ணின் மரண வாக்குமூலம் வீடியோ!

விழுப்புரம் மாவட்டம் வழுதாவூர் அருகே மனைவியை தீவைத்துக் கொன்ற கணவன் கைது செய்யப்பட்டார்.

By

Published : Nov 29, 2022, 3:54 PM IST

Published : Nov 29, 2022, 3:54 PM IST

Updated : Nov 29, 2022, 5:34 PM IST

ETV Bharat / state

"நான் மிரட்டினேன் அவர் கொளுத்திட்டார்" பெண்ணின் மரண வாக்குமூலம் வீடியோ!

"நான் மிரட்டினேன் அவர் கொளுத்திட்டார்" பெண்ணின் மரண வாக்குமூல வீடியோ!
"நான் மிரட்டினேன் அவர் கொளுத்திட்டார்" பெண்ணின் மரண வாக்குமூல வீடியோ!

விழுப்புரம்:கண்டமங்கலம் அருகே உள்ள வழுதாவூரைச் சேர்ந்தவர் முத்துக்குமரன். இவருடைய மனைவி சங்கீதா தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 27ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரை மருத்துவமனையில் அனுமதித்த கணவர் முத்துக்குமரன், குடும்பத்தகராறால் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்டார் என கூறியுள்ளார். சங்கீதா போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்திலும் இதனையே கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சங்கீதா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஒன்றில், தனது கணவர் முத்துக்குமரன் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக கூறியுள்ளார். கணவர் அவருடைய சகோதரி கலையரசியுடன் சேர்ந்து, தன்மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்ததாகவும் சங்கீதா கூறியுள்ளார். நான் மண்ணெண்ணெய் ஊற்றுவதாகத்தான் கூறினேன், ஆனால் அவர் மண்ணெண்ணெயை ஊற்றி கொளுத்தி விட்டார் என சங்கீதா கூறியுள்ளார்.

"நான் மிரட்டினேன் அவர் கொளுத்திட்டார்" பெண்ணின் மரண வாக்குமூல வீடியோ!

இதனை வெளியில் கூறினால் தனது பிள்ளைகளையும் மண்ணெண்ணைய் ஊற்றி கொளுத்திவிடுவேன் என்று மிரட்டியதால், அச்சத்தில் போலீசாரிடம் பொய்யான வாக்குமூலம் அளித்ததாகவும் கூறியுள்ளார். தனது உறவினர்கள் தன்னிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டதால், உண்மையை கூறுவதாகவும் சங்கீதா அந்த வீடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

இதனையடுத்து சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்த கண்டமங்கலம் போலீசார், முத்துக்குமரனை கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:போலி திருமண தளங்களில் சிக்கும் இளைஞர்கள்.. நூதன மோசடியில் இளம்பெண்கள்!

Last Updated : Nov 29, 2022, 5:34 PM IST

ABOUT THE AUTHOR

...view details