தமிழ்நாடு

tamil nadu

ப.சிதம்பரம் குற்றவாளி கிடையாது -விஷ்ணு பிரசாத்

By

Published : Sep 25, 2019, 8:45 PM IST

விழுப்புரம்: ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர, குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை என்று விஷ்ணு பிரசாத் தெரிவித்துள்ளார்.

vishnu prasad

விழுப்புரம் மாவட்டம் பனையபுரத்தில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் நா.புகழேந்தி அறிமுகக் கூட்டம், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், ஆரணி மக்களவை உறுப்பினர் விஷ்ணுபிரசாத், திமுக வேட்பாளர் நா.புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் திமுக வேட்பாளர் புகழேந்தியின் வெற்றிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் அயராது உழைக்கவேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய விஷ்ணுபிரசாத், ’தமிழ்நாட்டு மக்கள் இந்த ஆட்சி மீது வெறுப்பில் உள்ளனர். பால் விலை உயர்வு, டீசல் விலை உயர்வு ஆகியவற்றை மக்கள் மறக்கமாட்டார்கள்.

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதே தவிர, குற்றவாளி என நிரூபிக்கப்படவில்லை’ என்றார்.

ABOUT THE AUTHOR

...view details