விழுப்புரம் - புதுச்சேரி சாலையில் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வுகாணும் வகையில், விழுப்புரத்திலிருந்து வளவனூர் வரை நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாலை விரிவாக்கப் பணிகள், வடிகால் வாய்க்கால் அமைக்கும் பணிகள் கடந்த ஓராண்டு காலமாக நடைபெற்றுவருகின்றன.
இதனிடையே கரோனா ஊரடங்கு காரணமாக சாலை விரிவாக்கப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது ஊரடங்கில் சில தளர்வுகள் செய்யப்பட்டு சாலைப் பணிகள், கட்டுமான பணிகளுக்குச் சில கட்டுப்பாடுகளுடன் அரசு மீண்டும் அனுமதியளித்துள்ளது.