தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் 2021 அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. தேர்தல் பரப்புரைக்கு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றன.
இந்நிலையில், விழுப்புரம் மாவட்டம் வானூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட வானூர், கிளியனூர் ஒன்றியம் மற்றும் கோட்டகுப்பம் பேரூராட்சி ஆகிய பகுதிகளிலிருந்து மாற்றுக் கட்சியினர் நேற்று (டிசம்பர்-19) முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் லட்சுமணன் தலைமையில் திமுகவில் இணைந்தனர்.
வானூர் அடுத்த திருச்சிற்றம்பலம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் விழுப்புரம் மாவட்டச் செயலாளர் புகழேந்தி, கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கௌதம் சிகாமணி மற்றும் முக்கிய மாவட்ட பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.