விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன் தனது கட்சி நிர்வாகியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொள்வதற்காக கள்ளக்குறிச்சி வந்திருந்தார். அதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் மீது அடிக்கடி ஊழல் குற்றச்சாட்டு எழுந்த வண்ணம் உள்ளன.
ஏற்கனவே, எழுந்த பல குற்றச்சாட்டுகளின் மீது விசாரணை நடந்துவருகின்றன. தற்போது மீண்டும் அதேபோன்று குற்றச்சாட்டு எழுந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. டிஎன்பிஎஸ்சி முறைகேடு குறித்து முழுமையாக விசாரித்து குற்றவாளிகளைக் கண்டறிந்து, இதுபோன்ற முறைகேடுகள் மீண்டும் நடைபெறாமல் இருக்க ஆணயம் ஒன்றை அமைக்க வேண்டும்.