தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஜனநாயகக் கடமையாற்றிய சட்டத் துறை அமைச்சர் சண்முகம்!

விழுப்புரம்: விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் தனது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் கிராமத்தில் பிற்பகல் 12 மணியளவில் வாக்களித்தார்.

By

Published : Apr 6, 2021, 3:11 PM IST

தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தனது சொந்த ஊரில்  வாக்களித்தார்
தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் தனது சொந்த ஊரில் வாக்களித்தார்

தமிழ்நாட்டில் இன்று (ஏப். 6) சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. அனைத்துக் கட்சிகளின் வேட்பாளர்களும் தங்கள் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிகளுக்குச் சென்று, தங்களது வாக்குகளைச் செலுத்திவருகின்றனர்.

அமைச்சர் சி.வி. சண்முகம் தனது சொந்த ஊரில் வாக்களிப்பு

விழுப்புரம் மாவட்டம் மயிலம் சட்டப்பேரவைத் தொகுதியில் 23 மண்டலங்கள், 306 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் தனது சொந்த ஊரான அவ்வையார்குப்பம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வாக்குச்சாவடி எண் 200இல் விழுப்புரம் சட்டப்பேரவைத் தொகுதியின் வேட்பாளரும், தமிழ்நாடு சட்டத் துறை அமைச்சருமான சி.வி. சண்முகம் பிற்பகல் 12 மணியளவில் வாக்களித்தார்.

இதையும் படிங்க: 'உடுமலை ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் வாக்களிப்பு'

ABOUT THE AUTHOR

...view details