தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 9, 2019, 3:04 PM IST

ETV Bharat / state

கள்ளச்சாராயம் காய்ச்சியவர் குண்டர் சட்டத்தில் கைது

விழுப்புரம்: கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றுவந்த நபரை, காவல் துறையினர் குண்டர் சட்டத்தில் கைது செய்துள்ளனர்.

கள்ளசாரயம் காய்ச்சிய பன்னீர்செல்வம்

விழுப்புரம் மாவட்டம் லிங்காரெட்டி பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). இவர் தொடர்ந்து கள்ளச்சாராயம் காய்ச்சி, அதை கடத்தி விற்பனை செய்து மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இவர் மீது விழுப்புரம் மாவட்ட மதுவிலக்குப் பிரிவு, வளவனூர் காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.

எனவே, இவரின் குற்ற நடவடிக்கையை கட்டுப்படுத்த, விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரையை ஏற்று, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.

அதனடிப்படையில் வளவனூர் காவல் துறையினர் பன்னீர்செல்வத்தை கைது செய்து குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details