நாட்டில் கரோனா வைரஸ் தீவிரமாகப் பரவி வரும் சூழ்நிலையில், தொற்று பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ்நாடு மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் ஊரடங்கு தடை உத்தரவை மீறியதற்காக நேற்று (02.06.2020) மட்டும் 185 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 185 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களின் ஆவணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை தெரிவித்துள்ளது.