தமிழ்நாட்டில் கரோனா பரவலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை 485 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விழுப்புரம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த 3 பேர், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த இருவர் உள்பட 5 பேர் கரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்றிரவு விழுப்புரம், முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது கரோனா வைரஸ் தொற்று சிகிச்சைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளதா என்பதுகுறித்து மருத்துவக்கல்லுாரி முதல்வரிடம் கேட்டறிந்தார்.