தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 4, 2020, 5:19 PM IST

ETV Bharat / state

சாராய வியாபாரி குண்டர் சட்டத்தில் கைது!

விழுப்புரம்: கண்டமங்கலம் பகுதியைச் சேர்ந்த சாராய வியாபாரியை காவல் துறையினர் குண்டர் சட்டத்தின்கீழ் கைதுசெய்துள்ளனர்.

Liquor supplier arrested in goondas act in villupuram
Liquor supplier arrested in goondas act in villupuram

விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லிங்காரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் எத்திராஜ் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் (40).

இவர் சாராயம் வியாபாரம் செய்தல், ஆள் கடத்துதல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவரது நடவடிக்கையைக் கட்டுப்படுத்தும்பொருட்டு விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமாரின் பரிந்துரையை ஏற்று பன்னீர்செல்வத்தை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை உத்தரவிட்டார்.

அதன்பேரில் காவல் துறையினர் இன்று பன்னீர்செல்வத்தை கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details