விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட லிங்காரெட்டி பாளையத்தைச் சேர்ந்தவர் எத்திராஜ் என்பவரின் மகன் பன்னீர்செல்வம் (40).
இவர் சாராயம் வியாபாரம் செய்தல், ஆள் கடத்துதல் போன்ற குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டுவந்துள்ளார். இவர் மீது கண்டமங்கலம் காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.