தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jan 25, 2020, 8:24 PM IST

ETV Bharat / state

போலி தங்கக்காசு மோசடி - 3 பேர் கைது..!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே போலி தங்கக்காசு மோசடியில் ஈடுபட்ட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

விழுப்புரம் போலி தங்க காசு பறிமுதல் கள்ளக்குறிச்சி போலி தங்க காசு பறிமுதல் போலி தங்க காசு பறிமுதல் Villupuram counterfeit gold coin seized
Villupuram counterfeit gold coin seized

கள்ளக்குறிச்சி மாவட்டம் எலவனாசூர்கோட்டை பகுதியில் கரூர் வைஸ்யா வங்கியின் ஏ.டி.எம் ஒன்று செயல்பட்டுவருகிறது. இந்நிலையில், இன்று மாலை அப்பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஏ.டி.எம் அருகில் சந்தேகம்படும்படியாக மூன்று பேர் நின்று கொண்டிருந்தனர். அவர்கள் காவல் துறையினரை கண்டவுடன்

திருதிருவென முழித்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த காவல் துறையினர் அவர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர்கள் மூவரும் புகைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணி, பெருமாள், விழுப்புரம் மாவட்டம் பஞ்சமாதேவி பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் என்றும் போலி தங்கக்காசு விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது.

போலி தங்கக்காசு வழக்கில் கைது செய்யப்பட்ட மூவர்

இதையடுத்து, மூவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 1664 போலி தங்கக்காசுகளை பறிமுதல் செய்யப்பட்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:

வட்டி முரளி வீடு மற்றும் நகைக்கடையில் சோதனை..!

ABOUT THE AUTHOR

...view details