தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதி தற்கொலை

விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : May 19, 2022, 6:28 AM IST

விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை
விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் விசாரணை கைதி தூக்கிட்டு தற்கொலை

விழுப்புரம் : திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள டி. புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர் அதே பகுதியில் சின்னராசு என்பவர் கொலை வழக்கில் பிப்ரவரி 26 ஆம் தேதி முதல் வேடம்பட்டுவில் உள்ள விழுப்புரம் மாவட்ட சிறைச்சாலையில் இருந்துவந்தார்.

இந்நிலையில் சிறைக்கு வந்து சுமார் மூன்று மாதமாகியும் உறவினர்கள் அவரை ஜாமினில் எடுக்கவில்லை. இதனால் விரக்தியில் இருந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து நேற்று மாலை சிறை கழிப்பறைக்குள் சென்ற முருகன் நீண்டநேரமாக வெளியே வராததால் சிறை போலீசாரும் சக சிறைக் கைதிகளும் உள்ளே சென்று பார்த்தபோது கழிவறையில் ஜன்னலில் தான் அணிந்திருந்த லுங்கியால் தூக்கில் தொங்கிய படி இருந்துள்ளார்.

உடனடியாக சிறைத் துறையினர் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் விசாரணைக் கைதி முருகன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதனைத்தொடர்ந்து உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனையில் வைக்கப்பட்டுள்ளது. தற்கொலை சம்பவம் குறித்து காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க :திருவண்ணாமலையில் விசாரணை கைதி மரணம்: வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

ABOUT THE AUTHOR

...view details