தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 20, 2020, 9:39 PM IST

ETV Bharat / state

விழுப்புரத்தில் கனமழை: நிவாரணப் பொருள் வழங்கிய சட்டத்துறை அமைச்சர்!

விழுப்புரம்: கீழ்பேரடிகுப்பம் கிராமத்தில் நிவாரணப் பொருட்களை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.

நிவாரணப் பொருள் வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்
நிவாரணப் பொருள் வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் உள்ள கீழ்பேரடிகுப்பம் கிராமத்தில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் ஏரியின் மதகு உடைந்து கிராமத்தினுள் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் தண்ணீர் புகுந்தது. இதனை அடுத்து அதிமுக மரக்காணம் மேற்கு ஒன்றியத்தின் சார்பில் அரிசி, காய்கறி, வேட்டி, சேலை, போர்வை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் வழங்கினார்.

நிவாரணப் பொருள் வழங்கிய சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம்
அதன் பின்னர் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பார்வையிட்டு பொது மக்களுக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, கூடுதல் ஆட்சியர் ஸ்ரேயா சிங், சார் ஆட்சியர் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

ABOUT THE AUTHOR

...view details