இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து விழுப்புரம் மாவட்டத்துக்கு வருகை தந்தவர்கள் உடனடியாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்பட்டு வரும் அவசர கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்: 04146-1077, 04146-223265, மாவட்டத் தொற்றுநோய் மருத்துவ அலுவலரின் தொலைபேசி எண்: 95002-93057 ஆகிய எண்களுக்குத் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.
இதைத் தொடர்ந்து, அவர்கள் சுயமாகவே தங்களை 28 நாள்கள் தங்களது வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டு குடும்ப உறுப்பினர்களுக்கும், பொதுமக்களுக்கும் நோய் பரவாமல் பார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.