விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே செங்குறிச்சியில் உள்ள சுங்கச்சாவடியில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, வரிகொடா இயக்கத்தின் சார்பில் கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1-ம் தேதி தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
அப்போது சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதில், சுங்கச்சாவடியில் இருந்த கம்ப்யூட்டர், கண்காணிப்பு கேமரா என பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்தன.
சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு
இதுதொடர்பாக,வேல்முருகன் உள்பட 14 பேர் மீது உளுந்தூர்பேட்டை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.