விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலையத்தில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர், நேற்று மாலை தொண்டை புண் சிகிச்சைக்கு வந்த சிறுவனைப் பரிசோதித்திருக்கிறார்.
தொண்டை புண் பிரச்னைக்கு 5 மீட்டர் இடைவெளியில் சிகிச்சை பார்த்த மருத்துவர்!
விழுப்புரம்: கண்டமங்கலம் அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவர் ஒருவர், தொண்டை புண் சிகிச்சைக்கு வந்த சிறுவனுக்கு 5 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து டார்ச்லைட் மூலம் பரிசோதனை செய்யும் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மருத்துவரின் வைரஸ் வீடியோ
அப்போது கரோனா நடவடிக்கை என 5 மீட்டர் இடைவெளி விட்டு டார்ச்லைட் மூலம் பரிசோதனை செய்துள்ளார். அதனை அருகிலிருந்த இளைஞர் ஒருவர் செல்போனில் படம்பிடித்துள்ளார். அந்தக் கணொலி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
இதையும் படிங்க:அதிகமான கரோனா பரிசோதனை செய்யும் மாநிலம் தமிழ்நாடு: அமைச்சர் செல்லூர் ராஜு