தமிழ்நாடு

tamil nadu

காட்டுப்பன்றி மோதியதில் விவசாயி உயிரிழப்பு

By

Published : Dec 22, 2020, 7:19 PM IST

வேலூர்:குடியாத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த விவசாயி மீது காட்டுப்பன்றி மோதியதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

காட்டுப்பன்றி
Wild boar

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சூரளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சங்கரன் (60), இவர் நேற்று (டிச.21) இரவு குடியாத்தத்தில் இருந்து சூரளூர் கிராமத்தை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது அருகே உள்ள காப்பு காட்டில் இருந்து வந்த காட்டுப்பன்றி ஒன்று சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சங்கரன் மீது மோதியது.

நிலை தடுமாறி கீழே விழுந்த சங்கரன் பலத்த காயமடைந்ததால் உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி சங்கரன் உயிரிழந்துள்ளார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:லாரி மோதி விவசாயி பலி - பதறவைக்கும் சிசிடிவி காட்சி!

ABOUT THE AUTHOR

...view details