ஊரடங்கால் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்படையாத வகையில் 44 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டுவருகிறது. மேலும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் உள்ள கிடங்குகள், குளிர்பதன கிடங்குகளை பயன்படுத்திக்கொள்ள மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் உரங்களை வாங்கி பயன்படுத்திக்கொள்ள ஏதுவாக, தனியார் உரக்கடைகள் ஞாயிறு, திங்கள், வியாழன் ஆகிய நாள்களில் காலை 06.00 மணி முதல் 10.00 மணி வரை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.