வேலூர் மாவட்டத்தில், நேற்று மேற்கொள்ளப்பட்ட கரோனா தொற்றுக்கான பரிசோதனை முடிவுகளின் படி, காவலர் பயிற்சி பள்ளியில் பணியாற்றும் காவல் ஆய்வாளர் உள்பட 126 பேருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,249 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை, 357 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இன்று வைரஸ் தொற்றுக்கு ஆளானவர்களில் பெரும்பாலானோர், வேலூர் சிஎம்சி தனியார் மருத்துவமனையைச் சார்ந்தவர்கள் ஆவர்.