வேலூர் தொரப்பாடியில் உள்ள தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் தாமோதரன் என்பவர் நூலகராக பணியாற்றி வந்தார். இவர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாகக்கூறி கல்லூரி வளாகத்தில் மாணவ, மாணவிகள் நேற்று (மார்ச் 17) தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை - போக்சோவில் நூலகர் கைது
வேலூர்: கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அரசு தொழில்நுட்ப கல்லூரி நூலகரை, போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்தனர்.
போக்சோவில் கல்லூரி நூலகர் கைது
இதையடுத்து நூலகர் தாமோதரன் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, மாணவிகள் கோரிக்கையை ஏற்று கல்லூரி முதல்வர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் நூலகர் தாமோதரனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: போக்சோவில் 68 வயது முதியவர் கைது - ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனை!