தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 22, 2019, 12:45 PM IST

ETV Bharat / state

அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த 6 பேர் கைது!

வேலூர்: நாட்றம்பள்ளி அருகே அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுத்த ஆறு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

vellore

வேலூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெள்ளானூர் கிராமத்தில் வேனு என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு சாலை விபத்தில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் நேற்று உயிரிழந்தார். வெள்ளானூர் கிராம மக்கள் சுமார் 35 வருடங்களாக பயன்படுத்தி வந்த சுடுகாட்டில் இவரை ஆடக்கம் செய்ய குழி தோண்டிய போது அதே பகுதியில் வசிக்கும் சுப்பிரமணி என்பவரது குடும்பத்தினர் தகராறு செய்துள்ளனர். இது குறித்து நாட்றம்பள்ளி வட்டாட்சியர் உமாரம்யா சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை செய்த போது அரசு புறம்போக்கு இடம் என்பது தெரியவந்தது.

அரசு அலுவலர்களை பணி செய்ய விடாமல் தடுப்பு

இதனையடுத்து நில அளவை அலுவலர்கள், நில அளவு மேற்கொள்ளும் பணியில் ஈடுப்பட்ட போது அவர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக வட்டாட்சியர் உமாரம்யா நாட்றம்பள்ளி காவல்துறையில் புகார் அளித்தார். அதன் பேரில் சுப்பிரமணி, தவமணி, பாவை உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிக்க: மேம்பால வசதி இல்லாததால் ஆற்று நீரில் இறங்கி சடலத்தை எடுத்துச் சென்ற மக்கள்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details