தமிழ்நாடு

tamil nadu

இறப்பிலும் இணைபிரியாத 95 வயதான தம்பதியினர்!

திருப்பத்தூர்: கணவன் இறந்த துக்கத்தில் அவரது மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

By

Published : Nov 29, 2019, 7:49 AM IST

Published : Nov 29, 2019, 7:49 AM IST

Updated : Nov 29, 2019, 9:38 AM IST

வேலூர் மாவட்டச் செய்திகள்  old couples died in same day people get sad  சாவிலும் இணைப்பிரியாத தம்பதிகள்  vellore district news  சோலச்சூர் தம்பதி மரணம்  இறப்பிலும் இணைபிரியாத தம்பதியினர்  old couples died on same day in vellore
கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறப்பு: இணைபிரியாத 95 வயதான தம்பதியர்

காக்கங்கரையடுத்த சோலச்சூர் பகுதியைச் சேர்ந்தவர்கள் விவசாயி அரசு கவுண்டர் (95) - முனியம்மாள்(90) தம்பதியினர். சொந்த நிலத்தில் விவசாயம் செய்து வந்த இவர்கள், இருவரும் திருமணம் முடிந்ததிலிருந்தே பெரிய சண்டை சச்சரவுகள் இல்லாமல் இனிமையான, அழகான வாழ்வை வாழ்ந்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் வயதான பின்பும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல், ஒரு பரஸ்பரமாக வாழ்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது.

கணவன் இறந்த துக்கத்தில் மனைவியும் இறப்பு: இணைபிரியாத 95 வயதான தம்பதியர்

இந்நிலையில், வயது முதிர்ச்சியினால் சில நாட்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லாமல் படுத்த அரசு கவுண்டர், நேற்று உயிரிழந்தார். அரசு கவுண்டரின் இறுதி ஊர்வலத்தில், அவரது மனைவி முனியம்மாள் அவரைக் கட்டிப்பிடித்து கதறி அழுது கொண்டிருந்தார்.

அவ்வாறு அழுது கொண்டிருக்கும் போது, கணவர் மார்பு மீது சாய்ந்து உயிரிழந்தார். வாழும் போது இணைபிரியாது வாழ்ந்த தம்பதிகள் இறப்பிலும், இணை பிரியாமல் சென்றதை எண்ணி அப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இத்தம்பதியினரின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : தகவல் அறியும் உரிமைச் சட்டம்: 14 ஆண்டுகளில் 30 லட்சம் வழக்குகளுக்குத் தீர்வு!

Last Updated : Nov 29, 2019, 9:38 AM IST

ABOUT THE AUTHOR

...view details