தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மேகேதாட்டு விவகாரத்தில் மத்திய அரசு சூழ்ச்சி - அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகேதாட்டு குறித்து விவாதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை தமிழ்நாடு அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும் இது மத்திய அரசின் சூழ்ச்சி என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

By

Published : Jun 8, 2022, 11:13 AM IST

cauvery management
காவிரி ஆணையம்

வேலூர்: காட்பாடி பகுதியில் நேற்று (ஜூன் 7) மாலை நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு நியாயவிலை கடையை திறந்து வைத்து விவசாயிகளுக்கு நலத்திட்டங்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் வரும் 17 ஆம் தேதி டெல்லியில் நடைபெற உள்ள நிலையில் மேகேதாட்டில் அணை கட்டுவது குறித்து விவாதிக்கலாம் எனக் கூறப்பட்டிருப்பது கண்டிக்கதக்கது என்றும் இதில் மத்திய அரசின் சூழ்ச்சி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டினார்.

அமைச்சர் துரைமுருகன்

இதனிடையே காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேகேதாட்டில் அணை கட்டுவது தொடர்பாக விவாதிக்க கூடாது என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:காவிரி மேலாண்மை ஆணையம் விவாதிக்க தடை கோரி- உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்..!

ABOUT THE AUTHOR

...view details