தமிழ்நாடு

tamil nadu

"என்னது 25 பைசாவுக்குப் பிரியாணியா" - படையெடுத்த மக்கள் கூட்டம்!

வேலூர்: ஆரணியில் புதிதாகத் திறக்கப்பட்ட உணவகத்தில் 25 பைசாவுக்குப் பிரியாணி கொடுக்கும் அறிவிப்பால், மக்கள் கூட்டம் அலை மோதியது.

By

Published : Dec 2, 2019, 9:28 PM IST

Published : Dec 2, 2019, 9:28 PM IST

25 rs briyani
25 பைசாவுக்கு பிரியாணி

வேலூர் மாவட்டம், ஆரணி சாலையில் புதிதாக, வீட்டு முறை உணவகம் ஒன்று திறக்கப்பட்டது. உணவகத்தின் திறப்புவிழாவை முன்னிட்டு வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், இன்று 25 பைசாவுக்கு பிரியாணி வழங்கப்படும் என வேலூர் மாநகராட்சி முழுவதும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.

இதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக வீட்டிலிருந்த பழைய 25 பைசாவை தேடிக் கண்டுபிடித்து உணவகத்திற்கு எடுத்துச் சென்றனர். இதனால், உணவகத்தில் பெண்கள், ஆண்கள், பள்ளிக் குழந்தைகள் எனக் கூட்டம் அலைமோதியது. இச்சம்பவத்தால் அப்பகுதி திருவிழா வீதிபோல மாறியது.

25 பைசாவுக்குப் பிரியாணி
இதையும் படிங்க:திருச்சியில் 900 மாணவர்கள் பங்கேற்ற ஓவியப் போட்டி.!

ABOUT THE AUTHOR

...view details