வேலூர் மாவட்டம் ஆம்பூர் ஸ்ரீ விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் ஸ்ரீமத் பகவத் கீதை பாராயண போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பகவத் கீதையின் சுலோகங்களைச் சொல்லி சிறப்புகளை எடுத்துரைத்தனர். மேலும், எல்.கே.ஜி முதல் 12ஆம் வகுப்பு வரையில் பாராயண போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு வெள்ளி காசு பரிசாக வழங்கப்பட்டது.