வேலூர் சிஎம்சிக்கு எதிரே உள்ள காந்தி சாலையில் உள்ளது பாபு ராவ் தெரு. சைதாப்பேட்டையைச் சேர்ந்த இப்பகுதிக்குள் யார் சென்றாலும் தனித்துவமான உணர்வு ஒன்று கிடைக்கும், அதற்குக் காரணம் இங்கு அதிகம் வசிக்கும் பெங்காலிகள்.
வேலூர் மாவட்டம் மருத்துவச் சுற்றுலாவுக்குப் பிரசித்திப் பெற்ற நகரம். இங்குள்ள சிஎம்சி மருத்துவமனை இதற்கு மிக முக்கியக் காரணியாக அமைந்துள்ளது. மேற்கு வங்கம், மிசோரம், உத்தரப் பிரதேசம், ஹரியானா, அஸ்ஸாம் போன்ற பல்வேறு மாநிலங்களிலிருந்தும், நேபாளம், வங்கதேசம் போன்ற நாடுகளிலிருந்தும் இம்மருத்துவமனைக்குப் பலர் சிகிச்சைக்காக வருகிறார்கள்.
அவர்களில் பெரும்பாலானோர் பெங்காலிகள். இவர்கள் தற்காலிகமாக பாபு ராவ் தெருவில் வசித்துவருகின்றனர். இவர்களைக் கவர்ந்திழுக்க இங்குள்ள வியாபாரிகள் தங்களது கடைகளுக்கு கொல்கத்தா மெடிக்கல்ஸ், தாக்கா மெடிக்கல்ஸ் போன்ற பெங்காலி பெயர்களைச் சூட்டுகின்றனர்.
சிஎம்சியில் நீண்ட நாள்கள் சிகிச்சை பெறும் நோயாளிகள் இப்பகுதியில் தற்காலிகமாகத் தங்கி சிகிச்சையை முடித்துவிட்டு அதன்பிறகு சொந்த ஊர்களுக்குச் செல்கின்றனர்.
இது குறித்து அமீர் பாஷா என்ற சைதாப்பேட்டையைச் சேர்ந்த நபர் கூறுகையில், "கடந்த 45 ஆண்டுகளாக இங்கு வசித்துவருகிறேன். வெளியூரிலிருந்து இங்கு வருபவர்களுக்கு நாங்கள் உதவி புரிந்துவருகிறோம். அவர்களால் எங்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இப்பகுதியில் வசித்துவந்த சிலர் தங்களது வீடுகளைத் தங்கும் விடுதிகளாக மாற்றி வாடகைக்கு விட்டுவிட்டு அருகில் உள்ள பகுதிகளுக்குச் சென்றுவிட்டனர்.