திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த துத்திப்பட்டு வருவாய் அலுவலர் அலுவலகம் அருகில் தமிழ்நாடு அனைத்து விவாசய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் விவசாயிகள் தொடர் முழுக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாவட்டத்தை மூன்றாகப் பிரித்தபின் திருப்பத்தூர் மாவட்டத்தில் பேர்ணாம்பட் ஒன்றியத்தின் 51 ஊராட்சிகளிலிருந்து 26 ஊராட்சிகள் பிரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பேர்ணாம்பட் ஒன்றியம் வேலூர் மாவட்டத்தில் உள்ளதால் தற்போது பிரிக்கப்பட்ட ஊராட்சிகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மாதனூர் ஊராட்சியில் சேர்க்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதனால் பேர்ணாம்பட் ஊராட்சியிலிருந்து பிரிக்கப்பட்ட ஊராட்சிக்குள்பட்ட மக்கள், மாதனூர் ஊராட்சிக்கு செல்ல வேண்டுமென்றால் பாலாற்றைக் கடந்து சுமார் 45 கிலோ மீட்டர் பயணிக்கும் நிலையுள்ளது, இதனால் 26 கிராமத்தில் வசிக்கும் மக்கள் தங்கள் தேவைக்கு மிகுந்த சிரமப்படும் நிலையுள்ளது என பொதுமக்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.