வேலூர் அருகே உள்ள காப்புக்காடு பாலமதி முருகன் கோயில் அருகே வனப்பகுதிக்குள் அடையாளம் தெரியாத 30 வயது மதிக்கத்தக்க பெண் சடலமாக கிடப்பதாக பாகாயம் கிராம நிர்வாக அலுவலருக்குத் தகவல் இன்று அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிராம நிர்வாக அலுவலர் யாகண்டீஸ்வரன், பாகாயம் காவல் நிலைய போலீசாருக்குத் தகவலளித்த நிலையில் அங்கு காவல் ஆய்வாளர் செந்தில் குமார் தலைமையிலான போலீசார் விரைந்தனர்.
அங்கு சடலத்தைக் கைப்பற்றிய போலீசார், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், சம்பவ இடத்தில் மோப்ப நாய்கள் உதவியுடன் விசாரணை மேற்கொண்டனர்.