இது குறித்து திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறுகையில், திருச்சி காந்தி சந்தையில் அதிகளவில் பொதுமக்கள் கூடுவதாக புகார் எழுந்தது. அதனால் காந்தி மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில், நாளை முதல் (மார்ச் 26) காந்தி சந்தையில் மொத்த வியாபாரம் மட்டுமே நடைபெறும். அந்த வியாபாரம் இரவு 9 மணி முதல் மறுநாள் காலை 7 மணி வரை மட்டுமே நடைபெறும். சில்லரை வியாபாரிகளான மளிகைக் கடைக்காரர்கள் மட்டுமே காய்கறிகளை வாங்க வர வேண்டும். அப்படி வரும் வியாபாரிகள் மாஸ்க் அணிந்து வரவேண்டும்.
அதேபோல் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளும் மாஸ்க் அணிய வேண்டும். வாரத்தில் சனி, ஞாயிறு சந்தைக்கு விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்தார்.