திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களில் 6 ஊராட்சி ஒன்றியத்திற்கு முதல் கட்டமாக 27ஆம் தேதியும், இரண்டாம் கட்டமாக 30ஆம் தேதியும் தேர்தல் நடைபெறவுள்ளது.
மொத்தம் 4 ஆயிரத்து 77 பதவிகளுக்கு இத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9ஆம் தேதி தொடங்கியது. அதிமுக, திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தொகுதிப் பங்கீடு மற்றும் வேட்பாளர்கள் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது. தொடர்ந்து வேட்புமனு தாக்கல் கடைசி நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்ய அரசியல் கட்சியினரும் சுயேட்சையினரும் குவிந்தனர். அதில்,
- ’ 24 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 149 பேரும்,
- 241 ஊராட்சி யூனியன் வார்டு கவுன்சிலருக்கு ஆயிரத்து 443 பேரும்,
- 404 கிராம ஊராட்சித் தலைவருக்கு 2 ஆயிரத்து 212 பேரும்,
- 3 ஆயிரத்து 408 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 9 ஆயிரத்து 582 பேரும்’