தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருச்சியில் ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கநகை பறிமுதல்!

திருச்சி: கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு வந்த ஏர் ஏசியா விமானத்தில் ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள தங்க நகையை மறைத்து வந்த நபரை வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

By

Published : Feb 10, 2019, 12:26 PM IST

trichy

மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திற்கு இன்று வந்தது.

அதில் வந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

சோதனையின்போது, ஆஷிக் முகமது என்ற பயணி ரூ.6.31 லட்சம் மதிப்புள்ள 190 கிராம் தங்க சங்கிலியை மறைத்து அணிந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதிகாரிகள் அவரிடம் தீவிர சோதனையை மேற்கொண்டனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

இதையடுத்து, அதிகாரிகள் நகையை பறிமுதல் செய்து, ஆஷிக் முகமதுவை கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details