தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

குழந்தையை மீட்க களத்தில் இறங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழு!

திருச்சி: மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்க மாநில பேரிடர் மீட்புக் குழு களமிறங்கியுள்ளது.

By

Published : Oct 26, 2019, 12:33 PM IST

Updated : Oct 26, 2019, 12:40 PM IST

தேசிய பேரிடர் மீட்புக் குழு

திருச்சி மணப்பாறையில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்பதற்கு 18 மணி நேரமாக மீட்புக்குழு போராடிவந்த நிலையில் தற்போது மாநில பேரிடர் மீட்புக் குழு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளது.

தற்போது மணப்பாறையில் லேசான மழை பெய்துவருவதால் குழந்தையை மீட்பதில் சிக்கல் ஏற்பட வாய்ப்பில்லை என மீட்புக் குழுவினர் நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர்.

ஆழ்துளைக் கிணற்றில் மழைநீர் செல்லாமல் இருக்க மீட்புக் குழுவினர் தார்ப்பாய் பயன்படுத்திவருகின்றனர். மேலும், குழந்தையை மீட்க ஆறு குழுக்கள் சேர்ந்து போராடிவருகின்றனர்.

ஆனால், காலை ஆறு மணிக்கு வருவதாக இருந்த தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக் குழுவினர் தற்போது நிகழ்விடத்துக்கு வந்துள்ளனர்.

Last Updated : Oct 26, 2019, 12:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details