திருச்சி - மணப்பாறை அடுத்த கரும்புலிபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ஹரி சரவணன் (20). இவர் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அரநிலைபாளையத்தில் இருந்து கேக் வாங்கிக்கொண்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார்.
அப்பொழுது வீ.பூசாரிபட்டி பிரிவு சாலை அருகே எதிரே வந்த டிராக்டர் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச்சென்ற கரும்புலிபட்டியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் வசந்த்(23) சம்பவயிடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பின்னால் உட்கார்ந்து சென்ற ஹரி சரவணன் படுகாயமடைந்துள்ளார்.