கரோனா வைரஸ் தாக்குதல் இந்தியாவை அச்சுறுத்திவருகிறது. இதனால் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக ஏழை, எளிய மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்துவருகின்றனர். அவர்கள் உணவுக்காகத் திண்டாடும் சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏழைகளுக்கு நேரடியாக உணவுப்பொருள்கள், நிவாரண பொருள்கள் வழங்கும்போது அரசு அலுவலர்கள் உடன் இருக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உதவிடும் வகையில் அரசு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிவருகிறது. அந்த வகையில், திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரண பொருள்களை தொடர்ந்து வழங்கிவருகிறார். அவரது கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட வார்டு வாரியாக நிவாரண உதவிகளை வழங்கிவருகிறார்.