தமிழ்நாடு

tamil nadu

By

Published : May 5, 2020, 12:01 AM IST

ETV Bharat / state

திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்கிய அமைச்சர்

திருச்சி: கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள திருநங்கைகளுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நிவாரணம் வழங்கினார்.

அமைச்சர்
அமைச்சர்

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தாக்கத்தால், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பலர் வருவாய் இழந்து தவித்து வருகின்றனர். அவர்களுக்கு தன்னார்வ அமைப்புகள், அரசியல் கட்சியினர் மற்றும் பலர் உதவி செய்து வருகின்றனர்.

அந்த வகையில் திருச்சி மலைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த திருநங்கைகள் மற்றும் முதியவர்களுக்கு அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் இன்று அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். திருச்சி மரக்கடை பழைய பாஸ்போர்ட் அலுவலக வளாகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுகவினர் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details