திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட ஈஸ்வரன் கோயில் தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் ஒரு வாரமாக குடிநீர் வரவில்லை என்றும், இதுகுறித்து நகராட்சி நிர்வாகத்தினரிடம் முறையிட்டும் அவர்கள் அலட்சியபோக்குடன் செயல்படுவதால் மணப்பாறை-திருச்சி சாலையில் காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மணப்பாறையில் குடிநீர் பஞ்சம்: பொதுமக்கள் மறியல்
திருச்சி: மணப்பாறை நகராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் ஒரு வாரமாக குடிநீர் வராததால் அரசு அலுவலர்களை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
manapparai water crisis news
இதனையடுத்து பிரதான சாலையில் நடந்த மறியலால் போக்குவரத்து முடங்கிய தகவலறிந்து விரைந்த போலீசார் பொதுமக்களிடம் குடிநீர் விநியோகம் முறைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.