கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 நாள்களுக்கும் மேலாக மக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள காரணத்தினால், பல தொழில்கள் நலிவடைந்து, மக்கள் வாழ்வாதாரம் கேள்விக் குறியாகியுள்ளது.
அரசுத் தரப்பில் பல்வேறு தரப்பின மக்களுக்கு நிவாரணத்தொகை வழங்கப்பட்டு வந்தது. ஆனால், பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்டி தரும் எல்ஐசி முகவர்களுக்கு தமிழ்நாடு அரசு எந்த விதமான நிவாரணமும் வழங்கவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.