திருச்சி மாவட்டம் முசிறியில் காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் சங்கமம் ஏர் கலப்பை பேரணி பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதற்கு காங்கிரஸ் கட்சியின் திருச்சி வடக்கு மாவட்ட தலைவர் கலைராஜன் தலைமை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பேசுகையில், " தமிழ்நாட்டில் ஒரு கொடுமையான ஆட்சி நடைபெறுகிறது. 2,500 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டரை தவறு என்று கூறி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு, எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த சிபிஐக்கு உத்தரவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தடை பெற்றுள்ளார்.