இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தேசியத் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர்மொகிதீன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "கடந்த ஒன்பதாம் தேதியன்று தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக, 10ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை முழுவதுமாக ரத்து செய்வதோடு, அத்தேர்வர்கள் அனைவரையும் தேர்ச்சி பெற்றவர்களாகவும் அறிவித்து அரசாணை வெளியிட்டிருந்தார்.
கரோனா நோய்த்தொற்று தீவிரம்பெற்றுள்ள சூழலில், தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதை மனதார வரவேற்கிறேன். அதேசமயம் தமிழ்நாடு அரசின் இந்த அரசாணை, தமிழ்நாட்டினைத் தவிர்த்துப் பிற மாநிலங்களில் தமிழ்வழிக் கல்வியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொருந்துமா என்கிற கேள்வியும் குழப்பமும் நிலவுகிறது.