தமிழ்நாடு

tamil nadu

By

Published : Dec 16, 2020, 4:27 PM IST

ETV Bharat / state

விவசாயிகளுக்கு ஆதரவாக எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்!

திருச்சி: டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டமன்ற உறுப்பினர் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

Agriculture act
Farmers protest

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக மத்திய அரசு செயல்படுவதாக குற்றஞ்சாட்டி திருச்சி ஆட்சியர் அலுவலகம் முன்பு மூன்றாவது நாளாக காத்திருப்பு போராட்டம் இன்று (டிசம்பர் 16) நடைபெற்றது.

போராட்டத்தை திமுக தெற்கு மாவட்ட செயலாளரும் சட்டப்பேரவை உறுப்பினருமான மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். போராட்டத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மதிமுக, மக்கள் அதிகாரம், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அகில இந்திய விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு உள்ளிட்டவற்றை சேர்ந்த 200க்கும் மேற்பட்டோர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள சாலை முழுவதும் பாதுகாப்பு காரணங்களுக்காக திருச்சி மாவட்ட காவல்துறை துணை ஆணையர் பவன் குமார் ரெட்டி தலைமையில் காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.

ABOUT THE AUTHOR

...view details