தமிழ்நாடு

tamil nadu

முள்புதரில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்!

By

Published : Nov 11, 2020, 10:00 PM IST

ஏரி பகுதியில் முள்புதரில் கள்ளத்தனமாக பதுக்கிவைத்திருந்த 3 டன் ரேசன் அரிசியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.

முட்புதரில் பதுக்கிவைக்கப் பட்டிருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்!
முட்புதரில் பதுக்கிவைக்கப் பட்டிருந்த 3 டன் ரேசன் அரிசி பறிமுதல்!

திருப்பத்தூர்: வாணியம்பாடி அடுத்த அழிஞ்சிகுளம் பகுதியில், கள்ளத்தனமாக ரேசன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில், அழிஞ்சிகுளம் பகுதியில் சோதனை மேற்கொண்டபோது, நாகலேரி என்ற ஏரிப்பகுதியில் உள்ள முள்புதர் அருகில் சுமார் 60 மூட்டைகளில் பதுக்கிவைக்கப்பட்டிருந்த 3 டன் ரேசன் அரிசியை தனி வட்டாட்சியர் தலைமையிலான பறக்கும்படை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட அரிசி வாணியம்பாடி நுகர்பொருள் வாணிப கிடங்கில் ஒப்படைக்கப்பட்டது.

ரேசன் அரிசி பதுக்கல் குறித்து தனி வட்டாட்சியர் அம்பலூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அரிசி பதுக்கலில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details