ராமேஸ்வரம் ஓலைக்குடா பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியமேரி என்பவர், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், "ஓலைக்குடா பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்களின் பிரதான தொழிலாக மீன்பிடித்தல் இருந்துவருகிறது. கடற்கரையிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தொலைவு வரை மட்டுமே மீன்பிடிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதற்குமேல் இலங்கை கடல் எல்லை தொடங்குகிறது. அதோடு ஓலைக்குடா கடற்கரை பகுதியில் அரியவகை உயிரினங்களும் அதிகளவில் வாழ்ந்துவருகின்றன.
தற்போது ஓலைக்குடா பகுதியில் ராமேஸ்வரம் நகராட்சி சார்பாக கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. சுத்திகரிப்பு செய்த நீரை பைப்லைன் மூலம் கடலில் கலப்பதற்கு வேலைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த சுத்திகரிப்பு நிலையம் கடற்கரையிலிருந்து 90 மீட்டர் தொலைவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால், இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டால் அப்பகுதி மிக அதிக அளவில் பாதிக்கப்படும். மேலும் கழிவுநீர் சுத்திகரிப்பிற்காக ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட உள்ளது.