தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 12, 2019, 12:14 AM IST

ETV Bharat / state

‘பாஜக ஒரு கொலைகார கும்பல்' - வைகோ பாய்ச்சல்

திருப்பூர்: மத்திய அரசு காலால் சொல்வதை தலையால் செய்வதற்கு தயாராய் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்த அதிமுக அரசு கலையப்பட வேண்டும் என வைகோ கூறியுள்ளார்.

வைகோ பாய்ச்சல்

திருப்பூர் தொகுதி மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற கூட்டணியில் போட்டியிடும் சுப்பராயனை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய வைகோ மத்திய, மாநில அரசுகளை கடுமையாக விமர்சித்தார்.

தேர்தல் பரப்புரையில் வைகோ

இதில், “இந்த தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும். கொலைகார கூட்டம் மீண்டும் வெற்றி பெறுமா என்பதை தீர்மானிக்கும் முக்கியமான தேர்தல் களம் இது. இது மக்களுக்கான ஆட்சி அல்ல கார்ப்பரேட்டுகளுக்கான ஆட்சி. புல்வாமா தாக்குதலில் நாட்டிற்காக உயிரிழந்த ராணுவ வீரர்களை வைத்து வாக்கு கேட்பது மிகப்பெரிய ஆபத்து. மத்திய அரசு ஜனநாயகத்தை சீரழித்து வருகிறது. மக்கள் சிந்திக்க வேண்டும் தமிழ்நாட்டில், ஹைட்ரோ கார்பன் , முல்லை பெரியாறு , உயர்மின் கோபுரம் என பலவகைகளிலும் வஞ்சிக்கப்பட்டு வருகிறோம்.

அதிமுக அரசு ஊழல் புகார்களால் சிக்கி மத்திய அரசு காலால் சொல்வதை தலையால் செய்வதற்கு தயாராகி தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை பறிகொடுத்துவிட்டது. இந்த ஆட்சி இடைத்தேர்தல் முடிவுகளால் கலைக்கப்பட்டு சூரியன் உதிப்பதுபோல திமுக ஆட்சி அமைக்கும். மத்தியிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்” என அவர் தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details