தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

முதலமைச்சர் பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் - ஒருவர் கைது

திருப்பூர்: தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

By

Published : Aug 13, 2019, 10:02 AM IST

Updated : Aug 14, 2019, 10:01 AM IST

arrest

தமிழ்நாட்டில் பெய்துவரும் மழை காரணமாக பெரும்பாலான இடங்களில் உள்ள அணைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில் சேலத்தில் உள்ள மேட்டூர் அணையும் தற்போது நிரம்பி வருகிறது. இந்நிலையில் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

முன்னதாக நேற்று இரவு சென்னையில் உள்ள காவல் துறை கட்டுப்பாட்டு அறையை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்ட ஒருவர், நாளை (இன்று) தமிழ்நாடு முதலைமச்சர் பழனிசாமி மேட்டூர் அணையை திறக்க வரும்போது, அப்பகுதியில் வெடிகுண்டு வெடிக்கும் எனக் கூறி மிரட்டு விடுத்து தனது அழைப்பை துண்டித்தார்.

முதலமைச்சர் பழனிசாமிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த ஆடியோ

இதைத் தொடர்ந்து அந்த நபரின் செல்போன் எண்ணைக் கொண்டு காவல் துறையினர் ஆய்வு செய்ததில், வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது திருப்பூர் மாவட்டம் உடுமலை வட்டம் குழியூரைச் சேர்த்த தேவகிருஷ்ணன் (எ) குமார் என்பது தெரியவந்தது. பின்னர் சென்னை கட்டுப்பாட்டு அறையிலிருந்து வந்த தகவலின் அடிப்படையில், உடுமலை சரக கணியூர் காவல் துறையினர் தேவகிருஷ்ணனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Last Updated : Aug 14, 2019, 10:01 AM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details