சாலை பாதுகாப்பு வாரம் நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் இன்று தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
சாலை பாதுகாப்பு வாரம்: உடுமலையில் விழிப்புணர்வு பேரணி
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் சாலை பாதுகாப்பு வாரத்தை அடுத்து தலைக்கவசம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
rally
இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதைத் தொடர்ந்து பேசிய மோட்டார் வாகன ஆய்வாளர் முத்துக்குமார், சாலை பாதுகாப்பு வாரத்தை அடுத்து உடுமலை மக்களுக்கு தலைக்கவசத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த பேரணி நடத்தப்படுகிறது.
தமிழக அரசின் உத்தரவின்படி வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்பவர்களும் தலைக்கவசம் அணிந்து தங்களது உயிரை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார்.