அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகள் மற்றும் புனையப்பட்ட வழக்குகளை கைவிட வேண்டும் என்றும், அரசுத் துறையில் காலியாக உள்ள அனைத்து பணியிடங்களையும் காலமுறை ஊதிய ஏற்ற முறையிலான நியமனங்கள் மூலம் உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றது.
அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தியதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
திருப்பூர்: தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Govt Employees Union protest
மேலும், ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது 58லிருந்து 59ஆக உயர்த்துவதை திரும்பப் பெற வேண்டும், புதிய வேலை நியமன தடை சட்டத்தை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
இதையும் படிங்க:கரோனாவுக்கு முன்பு கல்லூரியின் உதவி பேராசிரியர், இப்போது முறுக்கு வியாபாரி!