திருப்பூர் மாவட்டம் உடுமலை மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சரும், அரசு கேபில் டிவி வாரிய தலைவருமான உடுமலை ராதாகிருஷ்ணன் சார்பாக அரிசி, காய்கறிகள், எண்ணெய் உள்ளிட்டவை வழங்கபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, உடுமலை, மெட்ராத்தி உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் சென்று 6000க்கும் மேற்பட்டோருக்கு 5 கிலோ அரிசி வீதம் 30 ஆயிரம் கிலோ அரிசிகளை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
அப்போது கடும் வெய்யிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று நிவாரண உதவிகளை பொது மக்கள் வாங்கிச்சென்றனர்.
திருப்பூரில் கரோனா நிவாரணம் வழங்கிய அமைச்சர்!
திருப்பூர்: கிராமம்தோறும் சென்று கரோனா நிவாரண உதவியாக அத்தியாவசியப் பொருட்களை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வழங்கினார்.
மக்களுக்கு அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் அத்தியாவசிய பொருள் வழங்கும் காட்சி
இதையும் படிங்க:சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இன்று முதல் முன் பதிவு தொடக்கம்