திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 30 வார்டுகளில் தனியார் நிறுவனத்தின் கீழ் ஒப்பந்த தொழிலாளர்களாக சுமார் 800க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இதில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்களும் அதிக அளவில் பணிபுரிந்து வருகின்றனர். ஒப்பந்த அடிப்படையில், பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாத ஊதியமாக தலா ரூ.9 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.
ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்
இந்நிலையில், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் கடந்த 2 மாதமாக ஊதியம் வழங்காமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் நிலுவையில் உள்ள ஊதியத் தொகையை உடனடியாக வழங்கினால் மட்டுமே பணிக்கு திரும்புவோம் எனக் கூறி பணிக்குச் செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால், மாநகராட்சிப் பகுதிகளில் துப்புரவு பணிகள் முடங்கின. இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், "ஒப்பந்த தொழிலாளர்களாக இருக்கும் எங்களுக்கு, நிறுவனம் உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. எங்கள் சம்பள தொகையை ஓரிரு மாதங்கள் என நிலுவையில் வைத்து, பின்னரே தருகின்றனர்.