தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 20, 2020, 4:20 PM IST

ETV Bharat / state

சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் மீது வன்கொடுமை புகார் - பொதுமக்கள் எதிர்ப்பு

திருப்பூர்: குன்னத்தூர் அடுத்த சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் மீது உண்மைக்கு புறம்பாக சாதிய வன்கொடுமை புகார் அளித்த குமார் என்பவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் அளித்தனர்.

community issue
community issue

இது குறித்து சுண்டக்காம்பாளையம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், "சுண்டக்காம்பாளையம் குருவாயூர் நகரில் குமார் என்பவர் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக வசித்து வருகிறார். இவர், அருந்ததிய சமூகத்தை சேர்ந்தவர். எங்கள் பகுதியில் அனைத்து சமூகத்தினரும் ஒன்றிணைந்து வாழ்ந்து வருகிறோம். ஆனால், கடந்த சில நாட்களாக அப்பகுதியில் உள்ள பெண்களுக்கும் குழந்தைகளுக்கும் பாலியல் ரீதியாக குமார் தொல்லை கொடுத்து வருகிறார்.

இது குறித்து சுண்டக்காம்பாளையம் ஊராட்சி தலைவர் லோகநாதன் தலைமையில் குன்னத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குமார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்தனர். இந்நிலையில், குமார் தனது குற்றத்தை மறைக்க சுண்டக்காம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவர் லோகநாதன், ஜெயகோபால் மீது உண்மைக்கு புறம்பாக சாதிய வன்கொடுமை புகார் அளித்துள்ளார். எனவே, குமார் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றனர்.

ABOUT THE AUTHOR

...view details