தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 9, 2019, 11:29 PM IST

ETV Bharat / state

கும்கி யானைகளைப் பார்த்து பயந்த சின்னதம்பி!

திருப்பூர்: உடுமலைப்பேட்டை அருகில் தஞ்சமடைந்துள்ள சின்னதம்பி யானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்ட நிலையில், கும்கி யானைகளை பார்த்து மீண்டும் கரும்பு தோட்டத்திற்குளேயே சின்னதம்பி சென்றது.

சின்னதம்பி

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே கண்ணாடிப்புத்தூர் பகுதியில் சின்னதம்பி காட்டுயானை தஞ்சம் அடைந்துள்ளது. குறிப்பாக அங்குள்ள ஒரு கரும்புத் தோட்டத்தில் நன்கு ஓய்வெடுத்துக்கொண்டு கரும்புகளை உண்டு வருகிறது. சின்னதம்பி காட்டுயானையை விரட்ட கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.

சின்னதம்பி

நீண்ட நேர தூக்கத்திற்குப் பிறகு சின்னத்தம்பி காட்டுயானை கரும்பு தோட்டத்தில் இருந்து வெளியே வந்தது. கும்கி யானைகள் பயன்படுத்தி அதை பிடிக்க முயற்சி செய்ததன் காரணமாக அது மீண்டும் கரும்பு தோட்டத்திற்கு உள்ளே ஓடியது.

இந்நிலையில் இன்று மாலை கரும்பு தோட்டத்தை விட்டு வெளியே வந்தது சின்னதம்பி. அதனை தொடர்ந்து அதை பிடிக்க முயற்சி செய்து கும்கி யானைகளை அதன் அருகில் கொண்டு போகும் பொழுது அது மீண்டும் கரும்பு தோட்டத்திற்கு உள்ளேயே சென்றுவிட்டது.

ABOUT THE AUTHOR

...view details